மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
பொங்கல் வெளியீட்டில் பெரிய அளவிலான மோதல் எதுவும் இல்லை. இரண்டாம் நிலை நடிகர்களின் படங்கள்தான் வெளியாகிறது. இதற்கடுத்து சில மாதங்களுக்கு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவை பெரும்பாலும் தனி வெளியீடாகத்தான் வர உள்ளது.
ஏப்ரல் 10ம் தேதியன்று தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படமும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், அன்றைய தினம் இருமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படமும் தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. அந்தப் படமும் ஏப்ரல் 10ம் தேதிதான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வெளிவந்தால் அன்றைய தினம் மும்முனைப் போட்டி நடக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் இப்படி மூன்று படங்கள் வெளிவந்தால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.
ஏப்ரல் வெளியீட்டிற்குப் பிறகு மே முதல் வாரத்தில் தான் படங்களை வெளியிட நாட்களைக் குறிப்பார்கள். ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் நடக்கும் என்பதால் அந்த மாதத்திலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராது.