மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
பொங்கல் வெளியீட்டில் பெரிய அளவிலான மோதல் எதுவும் இல்லை. இரண்டாம் நிலை நடிகர்களின் படங்கள்தான் வெளியாகிறது. இதற்கடுத்து சில மாதங்களுக்கு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவை பெரும்பாலும் தனி வெளியீடாகத்தான் வர உள்ளது.
ஏப்ரல் 10ம் தேதியன்று தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படமும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், அன்றைய தினம் இருமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படமும் தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. அந்தப் படமும் ஏப்ரல் 10ம் தேதிதான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வெளிவந்தால் அன்றைய தினம் மும்முனைப் போட்டி நடக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் இப்படி மூன்று படங்கள் வெளிவந்தால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.
ஏப்ரல் வெளியீட்டிற்குப் பிறகு மே முதல் வாரத்தில் தான் படங்களை வெளியிட நாட்களைக் குறிப்பார்கள். ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் நடக்கும் என்பதால் அந்த மாதத்திலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராது.