தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து திரைக்கு வந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற சந்தியா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தான். அந்த சிறுவன் செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விவகாரத்தில் தியேட்டருக்கு வந்து கூட்ட நெரிசல் ஏற்படுத்தி பெண் பலியாக காரணமான அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமினில் வந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இது குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து ஆந்திராவில் உள்ள ராம் கோபால்பேட்டை போலீசார், அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நீங்கள் பார்க்க செல்லக்கூடாது. எங்களது தடையை மீறி சென்று மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்களாம். அதன் காரணமாகவே சிறுவனை பார்க்க திட்டமிட்டு இருந்த அல்லு அர்ஜுன் அந்த முடிவை மாற்றிவிட்டாராம்.