மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து திரைக்கு வந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற சந்தியா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தான். அந்த சிறுவன் செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விவகாரத்தில் தியேட்டருக்கு வந்து கூட்ட நெரிசல் ஏற்படுத்தி பெண் பலியாக காரணமான அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமினில் வந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இது குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து ஆந்திராவில் உள்ள ராம் கோபால்பேட்டை போலீசார், அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நீங்கள் பார்க்க செல்லக்கூடாது. எங்களது தடையை மீறி சென்று மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்களாம். அதன் காரணமாகவே சிறுவனை பார்க்க திட்டமிட்டு இருந்த அல்லு அர்ஜுன் அந்த முடிவை மாற்றிவிட்டாராம்.