32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
2025ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி', அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்', ஆகிய படங்கள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் 'கேம் சேஞ்சர்' படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடித்துள்ள ஒரு படம் வரப் போகிறது, கொண்டாடித் தீர்ப்போம் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். படம் பொங்கலுக்கு வெளியாகாது தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களாகவே இப்படம் குறித்து வதந்திகள் பரவி வந்தது. திரையுலகில் விசாரித்த போது அது வேண்டுமென்றே பரப்புகிறார்கள். படத்திற்கு சென்சார் விண்ணப்பம் கூட செய்துவிட்டார்கள் என்றார்கள். ஆனால், கடைசி நேரத்தில் இப்படி தள்ளி வைத்திருப்பது திரையுலகினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனால், இந்த 2025ம் ஆண்டு ஆரம்பமே தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தடுமாற்றத்துடன் ஆரம்பமாகிறது.