ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
2025ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி', அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்', ஆகிய படங்கள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் 'கேம் சேஞ்சர்' படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடித்துள்ள ஒரு படம் வரப் போகிறது, கொண்டாடித் தீர்ப்போம் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். படம் பொங்கலுக்கு வெளியாகாது தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களாகவே இப்படம் குறித்து வதந்திகள் பரவி வந்தது. திரையுலகில் விசாரித்த போது அது வேண்டுமென்றே பரப்புகிறார்கள். படத்திற்கு சென்சார் விண்ணப்பம் கூட செய்துவிட்டார்கள் என்றார்கள். ஆனால், கடைசி நேரத்தில் இப்படி தள்ளி வைத்திருப்பது திரையுலகினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனால், இந்த 2025ம் ஆண்டு ஆரம்பமே தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தடுமாற்றத்துடன் ஆரம்பமாகிறது.