ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். நீண்ட வருடங்களாக அவருக்கென ஒரு தனி பாணியில் படங்களில் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் முதன் முதலில் உருவான 'பரோஸ் 3டி' படம் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியானது.
ஆனால், படத்திற்கு கேரளாவிலேயே வரவேற்பு கிடைக்கவில்லை. மோகன்லால் நடித்து வெளிவந்த படங்களில் பெரிய பிளாப் படமாக அப்படம் அமைந்துவிட்டது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் கடந்த ஆறு நாட்களில் வெறும் 9 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி நஷ்டம் என்று சொன்னார்கள். இந்தப் படத்தின் நஷ்டத்தையும் சேர்த்தால் அது 800 கோடிக்கும் அதிகமாக வரும்.