அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் |
மண்ணாங்கட்டி, டெஸ்ட், ராக்காயி, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக ஹரி இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தனது கணவர் விக்னேஷ் சிவன், மகன்களுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்லும் நயன்தாரா தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பாரிஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஈபிள் டவருக்கு விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர், உலக் ஆகியோருடன் சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையப்பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக நேற்று பாரிஸின் ஈபிள் டவரில் தீ விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.