டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மண்ணாங்கட்டி, டெஸ்ட், ராக்காயி, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக ஹரி இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தனது கணவர் விக்னேஷ் சிவன், மகன்களுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்லும் நயன்தாரா தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பாரிஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஈபிள் டவருக்கு விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர், உலக் ஆகியோருடன் சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையப்பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக நேற்று பாரிஸின் ஈபிள் டவரில் தீ விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.




