இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சத்தீஸ்கர் மாநில அரசு திருமணமான பெண்களுக்கு மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த தொகை நடிகை சன்னி லியோனுக்கும் கொடுக்கப்பட்டு வரும் தகவல் வெளியானதை அடுத்து, திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சன்னி லியோனுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டுமா? அதுவும் சன்னி லியோன் கனடா நாட்டைச் சேர்ந்தவர் . அவருக்கு எதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு உதவி தொகை வழங்குகிறது என்று சோசியல் மீடியாவில் அதற்கு எதிரான கருத்துக்கள் பதிவாகி வந்தன.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகள் இதை ஆராய தொடங்கினர். அப்போதுதான் நடிகை சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு, எந்தெந்த அதிகாரிகள் மூலமாக இப்படி இன்னொருவரின் பெயரில் அவர் உதவி தொகை பெற்று வருகிறார் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .