Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலையில் அறிமுகமான மஞ்சு வாரியரின் கையால் மாலையில் விருது பெற்ற விஜய் சேதுபதி

23 டிச, 2024 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-received-an-award-in-the-evening-from-Manju-Warrier,-who-introduced-him-in-the-morning.


வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த இரண்டாம் பாகத்தில் சூரியை விட விஜய் சேதுபதிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இதில் அவரது மனைவியாக ஒரு சமூக போராளியாக நடித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் டைரக்ஷனில் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இது.

இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, “கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அங்கே உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் சாப்பிட சென்றிருந்தபோது பழைய சோறு வைத்திருந்தார்கள். ஆர்வமாக சாப்பிடலாம் என நினைத்தபோது அங்கே சற்று தள்ளி தூரத்தில் மஞ்சு வாரியர் தன் குழுவினருடன் நின்று கொண்டிருந்தார். நாமாக போய் பேசலாமா, நம்மை அவருக்கு அடையாளம் தெரியுமா என்று தயக்கத்துடன் நான் அமைதியாக அமர்ந்திருந்தேன்.

ஆனால் சில நிமிடங்களில் அவரே என்னைப் பார்த்துவிட்டு நேரடியாக தேடி வந்து என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். அவர் என்னையெல்லாம் ஞாபகம் வைத்து இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். அன்றுதான் முதன்முறையாக அறிமுகமானோம். ஆனால் அன்று இரவே துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவரது கையால் நான் விருது பெற்றேன் என்பதும் இன்னொரு ஆச்சர்யம் தான். கிட்டத்தட்ட இது நடந்து ஏழு வருடம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் சுப்ரீம் ஸ்டாரா? : எனக்கே தெரியாது என்கிறார் சரத்குமார்நான் சுப்ரீம் ஸ்டாரா? : எனக்கே ... எம்ஜிஆருடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நடிக்க விரும்பும் சரத்குமார் எம்ஜிஆருடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)