அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
மலையாள திரையுலகையும் தாண்டி சமீப வருடங்களாக தமிழிலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை மஞ்சு வாரியர். சினிமாவில் இவர் அறிமுகமானது இயக்குனர் லோகிததாஸ் இயக்கத்தில் 1996ல் வெளியான சல்லாபம் என்கிற திரைப்படம் மூலம் தான். அந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மனோஜ் கே.ஜெயன். படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் மனோஜ் கே.ஜெயன் ஒரு பேட்டியில் கூறும்போது, மஞ்சு வாரியர் அந்த படத்தில் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் விதமாக எப்படி நடித்தார் என்பது குறித்து கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “சல்லாபம் படம் தான் மஞ்சு வாரியர் அறிமுகமான முதல் படம். முதல் படத்திலேயே அவர் ஒரு அறிமுக நடிகைக்கான எந்த தயக்கங்களும் இன்றி அந்த கதாபாத்திரமாகவே மாறி எதார்த்தமாக நடித்தார். படப்பிடிப்பு துவங்கி கிட்டத்தட்ட 24 நாட்கள் ஆன நிலையில், அதன் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு ரயில்வே டிராக்கில் படம் ஆக்கினார்கள். தன் உண்மையான காதல் தனக்கு கை கூடாத நிலையில் ஓடும் ரயிலில் விழுந்து தன் உயிரை மஞ்சு வாரியர் கதாபாத்திரம் மாய்த்துக் கொள்வதாக காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியில் நானும் இடம் பெற்றிருந்தேன்.
ஆனால் மஞ்சு வாரியர் வசனம் பேசியபடி தன்னை மறந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி ரயில் தண்டவாளத்தை நெருங்கி விட்டார். ரயில் கிட்டத்தட்ட அருகில் நெருங்கி விட்டது. அந்த சமயத்தில் உடனடியாக நான் அவரது கரங்களை வலுவாக பிடித்து மேலும் போகவிடாமல் தடுத்து நிறுத்தினேன். சரியாக அந்த நேரத்தில் ரயிலும் எங்களை மிக அருகில் ஒட்டியபடி சென்றது.
ரயில் சென்றதும் பின்னாலிருந்து இயக்குனர் கட் சொன்ன பிறகு தான் அவரை என் பிடியிலிருந்து விடுவித்தேன். அந்த காட்சி வீணாகிவிட்டது என்று தான் நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது என பாராட்டினார்கள். அன்று மட்டும் அவரை இழுத்து பிடிக்க விட்டால், அவர் ரயில் சக்கரங்களில் விழுந்து இருப்பார். ஒரு நல்ல நடிகையை இந்த திரையுலகம் இழந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.