இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா, பசுபதி மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஒடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற ஒரு படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை கடந்த வருடத்தில் வெளியிட்டார்கள்.
இதற்கிடையில் ரஞ்சித் தங்கலான் படத்தினை இயக்கி முடித்து அடுத்து வேட்டுவம் எனும் புதிய படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் சார்பட்டா பரம்பரை 2 எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை 2ம் பாகத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என நடிகர் ஆர்யா, ரசிகர்களுக்கு அப்டேட் தந்துள்ளார் .