படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
தமிழ் சினிமாவில் 'சேது' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. திரையுலகில் 25 வருடங்களைக் கடந்த அவருக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அத்துடன் அவர் இயக்கி பொங்கலுக்கு வெளியாக உள்ள 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் பாலாவின் இயக்கத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சிலரைத் தவிர பலர் விழாவுக்கு வருகை தரவில்லை. பாலா இயக்கிய முதல் படமான 'சேது' படத்தின் நாயகன் விக்ரம் வரவில்லை. இருந்தாலும் சூர்யா, அவரது அப்பா சிவகுமார் ஆகியோர் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். இத்தனைக்கும் இந்த 'வணங்கான்' படத்தில்தான் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
பாலாவின் இயக்கத்தில் நடித்த மற்ற நடிகர்களான விஷால், ஆர்யா, அதர்வா மற்றும் நடிகைகள் யாரும் வரவில்லை. ஒரு சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே வந்தனர். பாலாவின் இயக்கத்தில் நடிக்காத சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.