எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் சினிமாவில் 'சேது' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. திரையுலகில் 25 வருடங்களைக் கடந்த அவருக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அத்துடன் அவர் இயக்கி பொங்கலுக்கு வெளியாக உள்ள 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் பாலாவின் இயக்கத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சிலரைத் தவிர பலர் விழாவுக்கு வருகை தரவில்லை. பாலா இயக்கிய முதல் படமான 'சேது' படத்தின் நாயகன் விக்ரம் வரவில்லை. இருந்தாலும் சூர்யா, அவரது அப்பா சிவகுமார் ஆகியோர் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். இத்தனைக்கும் இந்த 'வணங்கான்' படத்தில்தான் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
பாலாவின் இயக்கத்தில் நடித்த மற்ற நடிகர்களான விஷால், ஆர்யா, அதர்வா மற்றும் நடிகைகள் யாரும் வரவில்லை. ஒரு சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே வந்தனர். பாலாவின் இயக்கத்தில் நடிக்காத சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.