பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
பிரதர் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் அடுத்தபடியாக கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கப் போகிறார். தற்போது மம்முட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், அந்த படத்தை அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் கவுதம் மேனனும், ஜெயம் ரவியும் முதன் முறையாக இணையப் போகிறார்கள்.
ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், சம்பள விவகாரத்தில் சிம்புவுக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாகவே மீண்டும் அதே நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கவுதம் மேனன் அழைப்பு விடுத்தபோது அதை சிம்பு நிராகரித்து விட்டதாகவும், அதனால் ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.