எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 45வது படத்தின் படப்பிடிப்பு கோயம்பத்தூரில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்ற அறிவிப்பு வெளிவந்தது.
கடந்த சில நாட்களாகவே இப்படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகுவார் என்ற தகவல் வந்து கொண்டிருந்தது. இப்படத்திலிருந்து ரஹ்மான் திடீரென விலகவில்லையாம். அவரை ஒப்பந்தம் செய்யும் போதே தனக்கு நிறைய படங்கள் இருப்பதாகவும், அதனால், இப்படத்தில் பணிபுரிய வாய்ப்பில்லை என்றே சொன்னாராம். இருப்பினும் அவரை எப்படியோ சம்மதிக்க வைத்துள்ளார்கள்.
இதனிடையே, அவருடைய திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டதால் அவர் விலகுகிறேன் என்று சொன்னதும் தயாரிப்பு நிறுவனமும் மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தகவல். ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களை முடித்துக் கொடுக்க மட்டுமே ஏஆர் ரஹ்மான் தற்போது முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். புதிய படங்களை தற்போதைக்கு ஏற்க அவர் விரும்பவில்லை என்கிறார்கள்.