Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

1000 கோடி வசூல்: சாதிக்கத் தடுமாறும் தமிழ் ஹீரோக்கள்?

08 டிச, 2024 - 12:39 IST
எழுத்தின் அளவு:
1000-crore-collections:-Tamil-heroes-struggling-to-achieve


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் யாருடைய படமாவது கொஞ்சம் ஓடிவிட்டால் போதும் 'வசூல் சக்கரவர்த்தி, வசூல் ராஜா, வசூல் இளவரசன், வசூல் தளபதி, வசூல் ஸ்டார், பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ, அதிரடி வசூல், ஆர்பாட்ட வசூல், அட்டகாச வசூல்,' என ஓவராக பில்டப் கொடுப்பார்கள்.

ஆனால், தெலுங்கு ஹீரோக்கள் சமீப காலங்களில் கொடுத்து வரும் வசூலைப் பார்த்து நமது தமிழ் ஹீரோக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும். அவர்களும் கமர்ஷியல் படங்களைத்தான் எடுக்கிறார்கள். இவர்களும் கமர்ஷியல் படங்களைத்தான் எடுக்கிறார்கள். ஆனால், அவர்களது படங்களைப் போல இங்கு நமது தமிழ்ப் படங்கள் ஓடுவதேயில்லை.

தெலுங்கு ரசிகர்கள் சினிமாவை நேசிப்பதைப் போல இங்குள்ள முன்னணி நடிகர்கள் பலரும் சினிமாவை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகிய ஒரு சிலரைத் தவிர மற்ற ஹீரோக்கள் அவர்கள் நடிக்கும் படங்களுக்காக தமிழில் கூட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

பெயருக்கு ஒரே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதையும் ஏதோ ஒரு டிவிக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டு, மற்றவர்களை வாசலுடன் வீடியோ எடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று அவமதிப்பது சமீப காலங்களில் நடந்து வருகிறது.

சென்னையைத் தாண்டி வேறு எந்த ஊருக்கும் போய் பேசுவது கூட இல்லை, பேட்டிகள் கொடுப்பதில்லை. ஒரே நாளில் 200 கோடி, 300 கோடி வசூல் சாதனையைப் புரியும் தெலுங்கு ஹீரோக்களான பிரபாஸ், ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் ஊர் ஊராக, மற்ற மொழி பேசும் மாநிலங்களுக்கு ஓடோடிச் சென்று அவர்களது படங்களைப் பற்றிப் பேச வைக்கிறார்கள்.

இப்போது ஒரே நாளில் 300 கோடி வரை வசூலித்த 'புஷ்பா 2' படத்திற்காக அல்லு அர்ஜுன் முக்கிய மாநிலங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் மட்டுமல்லாது படத்தின் நாயகி உள்ளிட்டவர்களும் தவறாமல் கலந்து கொண்டார்கள். ஆனால், இங்கோ சில நாயகிகள் படங்களில் நடிப்பதுடன் சரி. அவர்கள் நடித்த படங்களாக இருந்தால் கூட அந்தப் படங்களின் இசை வெளியீட்டிற்கோ, பத்திரிகையாளர் சந்திப்பிற்கோ வரவே மாட்டார்கள். எந்த யு டியுப் சேனலிலும் பேச மாட்டார்கள்.

இங்குள்ள கதாநாயகிகளை விடவும் அதிக சம்பளம் வாங்கும் மற்ற மொழி நடிகைகள் அவர்கள் படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக தவறாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவைப் பார்த்துத்தான் மற்ற மொழிகளிலும் சில நுணுக்கங்களை அவரவர் படங்களில் வெளிப்படுத்தினார்கள். ஆனால், இன்றோ தமிழ் சினிமா மிகவும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 500 கோடி வசூலைக் கடப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த ஆண்டில் வெளிவந்த ரஜினிகாந்த், விஜய் படங்கள் கூட வியாபார ரீதியாக லாபத்தைக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். ஆனால், அந்தப் படங்களை மாபெரும் வெற்றிப் படங்கள் என பொய்யாகக் கட்டமைக்க இங்கு ஒரு கூட்டமே சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் என பலரும் பாராட்டப்பட்டு வந்தார்கள். அவர்களது இயக்கத்தில் மற்ற மொழி நடிகர்களும் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ் என சில இயக்குனர்களின் கடைசி படங்கள் ரசிகர்களை பெரிதாகக் கவரவில்லை. லோகேஷ் கனகராஜ், நெல்சன் என ஒரு சில புதிய இயக்குனர்கள் ஒரு நம்பிக்கையைத் தருகிறார்கள். அதே சமயம், அவர்களும் முன்னணி ஹீரோக்கள் பின்னால்தான் போகிறார்கள். அப்படியே போனாலும் மற்ற மாநிலங்களிலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

இங்கும் சுமாரான ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை சூப்பர் படம் என பில்டப் கொடுப்பதும் தவறாமல் நடக்கிறது. 2000 கோடி வசூலிக்கும், ஜிஎஸ்டி விவரத்தைக் காட்டுகிறோம் என தேவையில்லாமல் பேசி, 'கங்குவா' படத்தை மீம் மெட்டீரியல் ஆக்கியதுதான் இங்கு மிச்சமாக இருக்கிறது.

தெலுங்குத் திரையுலகம் அடுத்தடுத்து ஹீரோயிசப் படங்களைத் தந்தாலும் அவற்றின் வெற்றி ஹிந்தித் திரையுலகமே பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 எடி, தேவரா' ஆகியவற்றுடன் தற்போது 'புஷ்பா 2' என அந்தப் படங்களின் வசூல் மிரள வைக்கிறது. கன்னடத்தில் கூட 'கேஜிஎப் 2' படம் பெரும் வெற்றியைக் கொடுத்து வியக்க வைத்தது.

தென்னிந்திய மொழிப் படங்களுக்கு மையமாக இருந்த சென்னையில் இருந்து உருவாகும் ஒரு படம் இன்னும் 1000 கோடி வசூலை அடைய முடியாமல் இருப்பது ஆச்சரியமும், அதிர்ச்சியும்தான்.

ஒரு பக்கம் 1000 கோடி வசூல் என்று வியாபார ரீதியாகப் பேசினாலும், மற்றொரு பக்கம் சில தரமான படங்கள் வந்து 100 கோடி வசூலிக்கவில்லை என்றாலும் கூட நமக்கு ஒரு ஆறுதலைத் தருகிறது. அந்தப் படங்கள் கூட வரவில்லை என்றால் நிலைமை மோசம்தான்.

சினிமா என்பது பொழுதுபோக்குதான் என்றாலும், அது மிகப் பெரும் வியாபாரம் சார்ந்தது. நல்ல படங்களும் தேவைதான், அதே சமயம் வசூலை அள்ளித் தரும் படங்களும் அவசியம். கடந்த ஏழு வருடங்களாக 1000 கோடி படம் ஒன்று தமிழிலும் வந்துவிடாதா என ஏங்கித் தவிக்கும் தமிழ் சினிமா ரசிகர்களின் பேராசையை 2025ம் ஆண்டிலாவது யாராவது தீர்த்து வைக்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நாகசைதன்யா 2வது திருமணம் : அலட்டிக் கொள்ளாமல் பார்ட்டி கொண்டாடிய சமந்தாநாகசைதன்யா 2வது திருமணம் : அலட்டிக் ... புஷ்பா 2 பார்க்க வந்து தியேட்டரில் உயிரிழந்த பெண் ; ஏற்கனவே கணவரை காப்பாற்ற தியாகம் செய்தவர் புஷ்பா 2 பார்க்க வந்து தியேட்டரில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Parthasarathy - Plainsboro,யூ.எஸ்.ஏ
11 டிச, 2024 - 09:12 Report Abuse
Parthasarathy ஒரு நடிகர் ப்ரோமோஷன் போனால் மட்டும் படம் ஓடி விடாது. கங்குவா படத்துக்கு சூரியா பண்ணாத ப்ரோமோஷனா? படத்தில் சரக்கு இல்லையே. தான் நடிதத்தால் மட்டும் போதுமா? கதை மற்றும் திரைக்கதை வேண்டாமா? மற்றவர்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுக்க பட்டு உள்ளது என்றும் பார்க்க வேண்டும். மற்ற மொழிகளில் சம்பளம் மொத்தமாக வாங்க மாட்டார்கள். பத்து சதவீதம் தான் வாங்குவார்கள். நல்ல வியாபாரம் ஆனா பிறகு மாற்றத்தை வாங்கி கொள்வார்கள். அனால் இங்கு தயாரிப்பாளர்களையும் நம்ப முடியாது. நடிகர்களையும் நம்ப முடியாது. தியேட்டர் அதிபர்களையும் நம்ப முடியாது. எல்லோருக்கும் எல்லாமே உடனே வேண்டும். முன்பெல்லாம் படம் பார்த்தபிறகுதான் படம் வியாபாரமே ஆரம்பிக்கும். ஆனால் இப்போது படத்த பார்க்காமலே பூஜை செய்யும் போதே படம் விற்று விடுகிறது. பிரஷர் காரணமாக டைரக்டர் படத்த நன்றாக எடுக்காமலே வெளி வந்து விடுகிறது. இதில் ஹீரோக்கள் தொல்லை வேற. அது இல்லாமல் செயற்கை விளம்பரம் வேற. சீக்கிரமாகவும் படம் எடுத்து விடுகிறார்கள். அதுவும் பிரச்சினை. பிரச்சினை மேலுக்கு மேல் இருந்தால் எப்படி ஒழுங்காக படம் எடுக்க முடியும். இப்படி தான் அரை குறையாக முடியும். புஷ்பா இரண்டாம் எடுப்பதற்கு இரண்டரை வருடம் எடுத்து கொண்டார்கள். அதுவரைக்கும் யாரும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதனால் தான் ஒழுங்கா வந்தது.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
09 டிச, 2024 - 09:12 Report Abuse
angbu ganesh ok உண்மையில் நீங்கள் கூறும் வேற்று மொழி படங்கள் 1000 கோடி சம்பாரிக்குதா பாகுபலி rrr ஓகே மத்த படங்களை பார்த்து இருக்கீங்களா kgf 1 & 2 pushpa 1 & 2 அந்த படங்களில் என்ன இருக்கு ஒன்னும் புரியல இல்ல எங்களுக்கு புரியலயான்னு தெரியல ஒரு அரை மணி நேரம் கூட என்னால அந்த படங்களை பக்க முடியல அவ்ளோ மொக்கையா இருக்கு ஆனா 1000 1500 கொடின்னு சொல்றனுவ உண்மையா
Rate this:
Parthasarathy - Plainsboro,யூ.எஸ்.ஏ
11 டிச, 2024 - 09:12Report Abuse
Parthasarathyஅது உண்மை தான். உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் அந்த படம் வசூல் செய்யவில்லை என்பது சொல்லமுடியாது. நானும் தான் பார்த்தேன். இரண்டுமே மிக நல்ல படங்கள். தமிழ் படங்கள் ஒரு கூண்டுக்குள்ளயே சுற்றி கொண்டு இருக்கிறது. நல்ல பாடல்கள் இல்லை. ஜாதியை வைத்தே படம் எடுக்கப்படுகிறது. ஒரு மதத்தை குறி வைத்தே படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நல்ல டியூன் உள்ள பாடல்கள் ஒன்று சொல்ல முடியுமா? அவர்கள் பாடல்களை பாருங்கள். அர்த்தம் புரிகிறதோ இல்லயோ டியூன் மற்றும் இசை நன்றாக இருக்கும். தமிழில் கடைசியாக வந்த நல்ல பொழுது போக்கு படம் கைதி மட்டுமே. மற்ற எல்லாமே ரொம்ப சுமாரான படங்கள்....
Rate this:
ramesh -  ( Posted via: Dinamalar Android App )
08 டிச, 2024 - 10:12 Report Abuse
ramesh Why we need to compete against this.. wasting fans time and money.. 1000 rs crore culture is not.good for welfare of.oyr society.. Leave it to the fans which one to watch.. don't market for your business benefit
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in