ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சூர்யா அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்திலிருந்து கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்று த்ரிஷா இணைந்துள்ளார். சூர்யா மற்றும் த்ரிஷா காட்சிகள் கோவில் அரங்கம் அமைத்து உருவாக்கி வருகின்றனர் என்கிறார்கள்.