குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் |
பெஞ்சல் புயலால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. வரலாறு காணாத மழையால் இந்த மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் அதன் பாதிப்பால் தத்தளித்து வருகின்றன. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் வட தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல் ஆளாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் நிவாரண நிதி வழங்குவார்கள் என தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் சென்னை, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வெள்ளம் பாதித்த மக்களை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார்.