Advertisement

சிறப்புச்செய்திகள்

கடவுள் பூமிக்கு வந்தால்… : சிம்புவின் 51வது பட அறிவிப்பு வெளியானது | லக்கி பாஸ்கரை அடுத்து 4 மொழிகளில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் | தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்: பார்வதி நாயருக்கு விரைவில் 'டும்.. டும்.. டும்..' | பிரியங்கா சோப்ரா இல்லாமல் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பை துவங்கிய ராஜமவுலி | கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ் | சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது | லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக்: சவுராஷ்டிர மொழி சொற்கள் இடம்பெற்ற ஒரே தமிழ் திரையிசைப் பாடல் | இளையராஜா முன் அவரது பாடல்களுக்கு நடனமாடி வசீகரித்த ரஷ்ய கலைஞர்கள் | நடிகராக 50வது படம், தயாரிப்பாளராக மாறிய சிம்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போதும் மகளே.. அபர்ணா பாலமுரளியிடம் கையெடுத்து கும்பிட்ட தந்தை

03 டிச, 2024 - 01:46 IST
எழுத்தின் அளவு:
Enough,-daughter..-Aparna-Balamuralis-father-bowed-to-her


மலையாளத்தில் பஹத் பாசிலுக்கு திருப்புமுனை தந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் தான் நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மலையாள படங்களில் மளமளவென முன்னேறியவர், தொடர்ந்து தமிழில் 'சூரரைப்போற்று', சமீபத்தில் வெளியான 'ராயன்' உட்பட முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். ஆனாலும் மலையாளத்தில் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் பிரபலமில்லாத கதாநாயகர்கள் என்றாலும் கூட கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடிக்கவும் அவர் தவறுவதில்லை.

அந்த வகையில் தற்போது 'ருத்ரம்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. இந்த படத்தை இயக்குனர் ஜிஷோ லான் ஆண்டனி என்பவர் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான ராஜ் பி.ஷெட்டி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 13ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் முறையாக ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. சவாலான கதாபாத்திரம் என்பதால் இதற்கு தேவையான முன் பயிற்சிகளையும் அவர் எடுத்துக் கொண்டார்.

அப்படி கொடுக்கப்பட்ட பயிற்சிகளை வீட்டில் ரிகர்சல் செய்து பார்ப்பதற்கு அவர் பயன்படுத்திய நபர் வேறு யாருமல்ல.. அவருடைய தந்தை தான்.. பயிற்சி எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்ததுமே தன் தந்தையை அழைத்து தான் பயிற்சி எடுத்த ஆக்சன் காட்சிகளை அவரிடம் செய்து காட்டுவார். தந்தையும் வேறு வழி இன்றி கொஞ்சம் பயத்துடனே மகளின் ஆக்சன் காட்சிகளை எதிர்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று சமாளித்துள்ளார்.

நல்ல வேளையாக எனக்கு ரிகர்சல் செய்வதற்கு இப்படி ஒரு தந்தை கிடைத்தது வசதியாக போய்விட்டது என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் அபர்ணா பாலமுரளி. அது மட்டுமல்ல தனது தந்தை தன்னிடம், “மகளே இந்த ஒரு ஆக்சன் படம் மட்டும் போதும்.. இனிமேல் வேறு எந்த ஆக்சன் படங்களையும் தயவு செய்து ஒப்புக்கொள்ளாதே” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதாகவும் சிரிப்பை அடக்க முடியாமல் கூறியுள்ளார் அபர்ணா பாலமுரளி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது - ஐகோர்ட்சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க ... மாலத்தீவில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு சென்ற வேதிகா மாலத்தீவில் பிகினி உடையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)