இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
நடிகர் தனுஷிற்கும், ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவுக்கும் 2004ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். சட்டபூர்வமான விவாகரத்து கோரி பரஸ்பரம் ஒப்புதலோடு நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது முதன்மை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையும் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் இருமுறை வழக்கு வந்தபோதும் இவர்கள் ஆஜராகவில்லை. இதனால் இவர்கள் சேர்ந்து வாழ பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தனுஷ், ஐஸ்வர்யா இன்று(நவ., 21) ஆஜராகினர். இருவரும் சேர்ந்த வாழ விருப்பம் இன்றி பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற நவ., 27ல் அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்து வழக்கை அன்றைய தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.