இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். ரசிகர்களின் வரவேற்பை பெற்று 3வது வாரத்தை கடந்து ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. அதே சமயம் இந்த அமரன் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது போன்று காட்சிகள் இருப்பதாக சொல்லி சமீபத்தில் சில இஸ்லாமிய அமைப்புகள் அமரன் படம் ஓடிய தியேட்டர்களும் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் அமரன் படம் ஓடிக்கொண்டிருந்த போது அந்த தியேட்டர் வாசலில் யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளார்கள். இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் வெடிகுண்டு வீசிய நபர்களை தேடி வருகிறார்கள்.