300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, புலி, வேதாளம், லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் ரஜினியின் மகளாக பிரீத்தி என்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பெற்றோர் குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ''கமல்ஹாசன், சரிகாவின் மகளாக இருப்பது எனக்கு பெருமை தான். அதே சமயம் என்னை அனைவருமே கமலின் மகள் என்றுதான் கூறுகிறார்கள். என் தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக உள்ளது. அதனால் எனக்கு என்று ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறேன்,'' என்று கூறியிருக்கும் ஸ்ருதிஹாசன், ''எனது பெற்றோர் பிரிந்த பிறகு அம்மாவுடன் நானும் மும்பைக்கு சென்று விட்டேன். அவர்கள் இருவரும் பிடிவாதமாக பிரிந்து வாழ்வது வருவது என்னையும் எனது தங்கை அக்ஷராவையும் பெரிய அளவில் பாதித்துள்ளது,'' என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.