காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, புலி, வேதாளம், லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் ரஜினியின் மகளாக பிரீத்தி என்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பெற்றோர் குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ''கமல்ஹாசன், சரிகாவின் மகளாக இருப்பது எனக்கு பெருமை தான். அதே சமயம் என்னை அனைவருமே கமலின் மகள் என்றுதான் கூறுகிறார்கள். என் தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக உள்ளது. அதனால் எனக்கு என்று ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறேன்,'' என்று கூறியிருக்கும் ஸ்ருதிஹாசன், ''எனது பெற்றோர் பிரிந்த பிறகு அம்மாவுடன் நானும் மும்பைக்கு சென்று விட்டேன். அவர்கள் இருவரும் பிடிவாதமாக பிரிந்து வாழ்வது வருவது என்னையும் எனது தங்கை அக்ஷராவையும் பெரிய அளவில் பாதித்துள்ளது,'' என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.