காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
‛இமைக்கா நொடிகள், அடங்கமறு, அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தியிலும் நடிக்கிறார். தற்போது ஹிந்தியில் ‛தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். நாளை(நவ., 15) இந்தப்படம் வெளியாகிறது. இதுதொடர்பான புரொமோஷனில் இவர் ஈடுபட்டார். அதன் ஒருபகுதியாக தன் வாழ்வில் வந்த காதல் தோல்வி பற்றியும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛பொதுவாகவே நான் உணர்ச்சிவசப்படுபவள். என் வாழ்விலும் காதல் வந்தது, ஆனால் அது தோல்வி அடைந்துவிட்டது. அந்த வேதனையில் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பின்னர் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வலுவானேன். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சினிமா உதவியால் அதிலிருந்து மீண்டு வந்தேன்'' என தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.