23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா |
சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சித்தார்த் நடிப்பில் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'மிஸ் யூ'. 'களத்தில் சந்திப்போம், மாப்ள சிங்கம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் தெலுங்கு நடிகை ஆஷிகா ரங்கநாத். இந்த படம் குறித்து சமீபத்தில் இயக்குனர் ராஜசேகர் கூறும்போது, ''தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை கதாநாயகன் காதலிக்கும் கதை. இந்த ஓன்லைனை கேட்டதும் உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சித்தார்த். நாயகனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அவன் தன்னை காதலிக்கிறான் என்பதை எப்படி நாயகி ஏற்றுக் கொள்கிறாள்? இருவரும் காதலித்து பின் பிரேக்கப் ஆன பிறகு அதன் பிறகு உண்மையான காதல் என்ன என்பதை உணர்கிறார்கள் இதுதான் கதை'' என்றும் கூறியுள்ளார்.
பிடிக்காத பெண்ணை காதலிப்பது தான் இந்த படத்தின் தனித்துவமான கதை என்றும் தனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு தான் இந்த கதைக்கு தூண்டுதலாக அமைந்தது என்றும் கூறியுள்ளார். இயக்குனர் என்.ராஜசேகர். ஆனால் இவர் சொல்லும் அம்சங்கள் எல்லாமே கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'பட்டம் போலே' என்கிற படத்திற்கு மிக சரியாக பொருந்துகின்றன. அந்த படத்தில் தான் கதாநாயகியாக முதன் முதலாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.
அந்த படத்தில் துல்கரும் மாளவிகாவும் ஏதோ ஒரு ஈர்ப்பின் காரணமாக காதலித்து, அதனால் வீட்டை விட்டு ஓடிச்சென்று பின் ஓரிரு நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடித்துக் கொள்ளாத குறையாக அவரவர் வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். அதன் பிறகு எங்கு பார்த்தாலும் கீரியும் பாம்புமாகத்தான் சீறி கொள்வார்கள். ஆனால் போகப்போக இவர்களுக்குள் மீண்டும் காதல் துளிர் விடும். அந்த காதலை மீண்டும் அடைவதற்கு இருவரும் நடத்தும் போராட்டம் தான் படத்தின் கதை. மிஸ் யூ வந்த பின்னர் பார்த்தால் தான் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் கிளியராக தெரிந்துவிடும்.