25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் மாநில மாநாட்டையும் பிரமாண்டமாக நடத்தி முடித்து விட்டார். அவரது மாநாடு வெற்றி பெற்றதாக ரஜினி உட்பட பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் ரஜினியின் அண்ணனான சத்திய நாராயணா அளித்துள்ள ஒரு பேட்டியில், அவரிடத்தில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''கமல்ஹாசனை போன்று விஜய்யும் அரசியலில் முயற்சி செய்கிறார். அது ஒன்றும் தப்பில்லை. ஆனால் விஜய்யால் தமிழக அரசியலில் பெரிதாக வெற்றி பெற முடியாது,'' என்று ஒரு கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதே சத்ய நாராயணா தனது தம்பியான ரஜினி அரசியல் கட்சி தொடங்க இருந்தபோது, 'அவர் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்' என்று கருத்து கூறியிருந்தார். ஆனால் ரஜினி அரசியல் கட்சியே தொடங்கவில்லை. அதேபோல் கமல்ஹாசனின் அண்ணனான நடிகர் சாருஹாசனோ, கமல் அரசியலுக்கு வருவதாக இருந்தபோது, ரஜினி அரசியலில் சாதிப்பார். ஆனால் என் தம்பி கமல்ஹாசன் பிராமணர் என்பதால் அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அப்போது கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.