டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதல் வசப்பட்டனர். சில வருடங்கள் தங்களது காதலை வலுவாக்கிக் கொண்டு, கடந்த 2022 ஜூன் மாதம் திருமணத்தில் இணைந்தனர். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த இரண்டு குழந்தைகளுடனுமான தங்களது சந்தோஷ நிகழ்வுகளை அவ்வப்போது தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சோசியல் மீடியாவில் பதிவுகளாக வெளியிடத் தவறுவதில்லை.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணம் நடைபெற்ற மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டான் கோல்ட் சென்னை ரிசார்ட்டுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விசிட் அடித்துள்ளனர். இது குறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இது குறித்து அவர் கூறும்போது, “எங்களது திருமணம் நடைபெற்ற அதே இடத்திற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கிறோம். மீண்டும் அதேபோல இங்கே கிடைக்கப் போகும் மறக்க முடியாத தருணங்களுக்காக எங்களால் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.




