‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதல் வசப்பட்டனர். சில வருடங்கள் தங்களது காதலை வலுவாக்கிக் கொண்டு, கடந்த 2022 ஜூன் மாதம் திருமணத்தில் இணைந்தனர். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த இரண்டு குழந்தைகளுடனுமான தங்களது சந்தோஷ நிகழ்வுகளை அவ்வப்போது தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சோசியல் மீடியாவில் பதிவுகளாக வெளியிடத் தவறுவதில்லை.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணம் நடைபெற்ற மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டான் கோல்ட் சென்னை ரிசார்ட்டுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விசிட் அடித்துள்ளனர். இது குறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இது குறித்து அவர் கூறும்போது, “எங்களது திருமணம் நடைபெற்ற அதே இடத்திற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கிறோம். மீண்டும் அதேபோல இங்கே கிடைக்கப் போகும் மறக்க முடியாத தருணங்களுக்காக எங்களால் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.