‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விஜய் நடித்து வெளிவந்த படத்தின் கிளைமாக்சில் தன்னிடமிருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுக்கும்படியான காட்சி ஒன்று இருந்தது. சினிமாவை விட்டு விலகி விஜய் அரசியலில் பயணிக்கப் போவதை அடுத்து அவருடைய இடத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு சிவகார்த்திகேயனுக்குத்தான் இந்த இடம் என 'குறீயீடாக' அந்தக் காட்சி அமைந்ததா என பலரும் விமர்சித்தார்கள்.
'அமரன்' படத்தின் புரமோஷனுக்காக நேற்று கோவை சென்ற சிவகார்த்திகேயனிடம் அது குறித்து பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிவகார்த்திகேயன், “நான் அந்தக் காட்சிக்குள்ள எதுவுமே பார்க்கலை. சினிமாவுல நடந்த அழகான ஒரு நிகழ்வா பார்க்கிறேன். ஒரு சீனியர் ஆக்டர், அடுத்த அவங்க செட் ஆக்டரோட ஒரு ஸ்கிரீன் ஷேர் பண்ணாங்க. அது அழகா இருந்துச்சு, அதை மட்டும்தான் நான் பார்த்தேன். நான் சினிமாவுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு,” எனப் பேசி சமாளித்தார்.
விஜய் கடைசியாக அவரது 69வது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்குப் பின் அந்த இடத்திற்கு யார் வரப் போகிறது என்ற போட்டி இப்போதே ஆரம்பமாகிவிட்டது.