வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். அவருடைய பெண் தோழியான நடிகை பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் ரேணுகாசுவாமி என்பவர் தொல்லை தந்ததாக கொலை செய்தார். இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையிலும் அவருக்கு சில வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு ஆறு வார கால ஜாமின் வழங்கியுள்ளது.
முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அவர் மனு செய்ததை அடுத்து இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் மாநில அரசும் அதற்கு பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.
மருத்துவ சிகிச்சை முடிந்த பின் அவர் உடனே சிறைக்குத் திரும்புவாரா அல்லது மேலும் சில வாரங்கள் நீட்டிப்பு கேட்பாரா என்பது அறுவை சிகிச்சை முடிந்த பிறகுதான் தெரியும்.