காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். அவருடைய பெண் தோழியான நடிகை பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் ரேணுகாசுவாமி என்பவர் தொல்லை தந்ததாக கொலை செய்தார். இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையிலும் அவருக்கு சில வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு ஆறு வார கால ஜாமின் வழங்கியுள்ளது.
முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அவர் மனு செய்ததை அடுத்து இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் மாநில அரசும் அதற்கு பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.
மருத்துவ சிகிச்சை முடிந்த பின் அவர் உடனே சிறைக்குத் திரும்புவாரா அல்லது மேலும் சில வாரங்கள் நீட்டிப்பு கேட்பாரா என்பது அறுவை சிகிச்சை முடிந்த பிறகுதான் தெரியும்.