நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு |
கோட் படத்தை அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசை அமைக்க, முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது. அங்கு நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் விஜய் நடித்த ஓப்பனிங் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு முதல் கட்ட படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் திட்டமிட்டு இருந்த வினோத், 9 நாட்களிலேயே அனைத்து காட்சிகளையும் படமாக்கிவிட்டு திரும்பியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதாவது காவல் துறையிலிருந்து ஒரு பிரச்னையால் வெளியேறும் விஜய், ஒரு முக்கிய கேஸ் சம்பந்தமாக மீண்டும் போலீஸ் பணியில் சேர்ந்து அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் இதன் கதை அமைந்திருக்கிறது. அந்த குற்றவாளி யார்? எப்படிப்பட்ட குற்றம் செய்தவர் என்ற சஸ்பென்ஸ் உடையும்போது மிகப்பெரிய அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்குமாம். அதன் காரணமாகவே இந்த சஸ்பென்ஸ் உடைந்திராத வகையில் அது சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளாராம் எச்.வினோத்.