'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
திராவிட இயக்க படைப்பாளர்களில் முக்கியமானவர் பாரதிதாசன். திரைப்படங்களில் உணர்ச்சியூட்டும் பல பாடல்களை எழுதி உள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். அவர் முதன் முதலாக பாடல் எழுதியது 'ஸ்ரீராமானுஜர்' என்ற பக்தி படத்திற்கு. ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே அவர் பாடல்கள் எழுதிய 'பாலாமணி அல்லது பக்கா திருடன்' என்ற படம் வெளிவந்து அதுவே முதல் படமானது.
'பக்கா திருடன்' ஒரு துப்பறியும் படம். ஒரு பணக்கார வீட்டு பெண்ணுக்கு திருமணம் நடக்கும்போது அவளையும், அவள் வருங்கால கணவனையும் யாரோ கடத்தி சென்று ஒரு குகைக்குள் அடைத்து வைக்கிறார்கள். வருங்கால கணவன் அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடுகிறான். அந்த பெண்ணும் தப்பி வரும்போது இறந்து கிடந்த ஒரு குழந்தையை எடுத்து அதை முறைப்படி புதைக்க முயற்சிக்கும்போது குழந்தையை கொன்றதாக அவள் கைது செய்யப்படுகிறாள். படத்தின் நாயகனான துப்பறியும் நிபுணர் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை.
'பாலாமணி' படத்தை பி.வி.ராவ் என்பவர் இயக்கி இருந்தார், டி.எஸ்.ஜெயா பாலாமணியாகவும், எஸ்.வி.சகஸ்ரநாமம் துப்பறிவாளராகவும் நடித்திருந்தார்கள், ஸ்ரீராமானுஜர், பாலாமணி இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை.