த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் |
திராவிட இயக்க படைப்பாளர்களில் முக்கியமானவர் பாரதிதாசன். திரைப்படங்களில் உணர்ச்சியூட்டும் பல பாடல்களை எழுதி உள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். அவர் முதன் முதலாக பாடல் எழுதியது 'ஸ்ரீராமானுஜர்' என்ற பக்தி படத்திற்கு. ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே அவர் பாடல்கள் எழுதிய 'பாலாமணி அல்லது பக்கா திருடன்' என்ற படம் வெளிவந்து அதுவே முதல் படமானது.
'பக்கா திருடன்' ஒரு துப்பறியும் படம். ஒரு பணக்கார வீட்டு பெண்ணுக்கு திருமணம் நடக்கும்போது அவளையும், அவள் வருங்கால கணவனையும் யாரோ கடத்தி சென்று ஒரு குகைக்குள் அடைத்து வைக்கிறார்கள். வருங்கால கணவன் அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடுகிறான். அந்த பெண்ணும் தப்பி வரும்போது இறந்து கிடந்த ஒரு குழந்தையை எடுத்து அதை முறைப்படி புதைக்க முயற்சிக்கும்போது குழந்தையை கொன்றதாக அவள் கைது செய்யப்படுகிறாள். படத்தின் நாயகனான துப்பறியும் நிபுணர் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை.
'பாலாமணி' படத்தை பி.வி.ராவ் என்பவர் இயக்கி இருந்தார், டி.எஸ்.ஜெயா பாலாமணியாகவும், எஸ்.வி.சகஸ்ரநாமம் துப்பறிவாளராகவும் நடித்திருந்தார்கள், ஸ்ரீராமானுஜர், பாலாமணி இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை.