ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி உள்ளார்.
இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பை அந்தமான், கேரளா, மூணார்,சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தி வந்தனர். சமீபத்தில் இதன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.
கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டி ஒன்றில், " சூர்யா 44வது படமாக கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது. ஆனால், சூர்யா 44 படம் ஒரு அழகான காதல் கதை. அதில் ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. சூர்யா, பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உருவாக்கியுள்ளது. இப்படம் 2025ம் ஆண்டு கோடையில் திரைக்கு வருவதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.




