கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை |
முத்தைத்தரு பத்தித் திருநகை, அத்திக்கிறை சத்திச் சரவண, முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்...'
'சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி, சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்...'
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்...'
'இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்'
'வருவேன் நான் உனது வாசலுக்கே...'
'உள்ளத்தின் கதவுகள் கண்களடா, இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா...'
'குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதாக...'
'ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே...'
இப்படியான பாடல்களை அடிக்கடி ரசித்து கேட்போம். இதற்கு இசை அமைத்திருப்பது எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லது கே.வி.மகாதேவன் என்றே பலரும் நினைத்திருப்போம். ஆனால் இதற்கு இசை அமைத்தது டி.ஆர்.பாப்பா. குறைவான படங்கள், குறைவான பாடல்களுக்கு இசை அமைத்திருந்தபோதும் அத்தனை பாடல்களையும் ஹிட் பாடலாக கொடுத்த ஒரே இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பாதான்.
மிகப்பெரிய வயலின் வித்வானாகத் திகழ்ந்து, இசையமைப்பாளராக உயர்ந்தவர். திருத்துறைப்பூண்டிதான் சொந்த ஊர். அப்பா பெயர் ராதாகிருஷ்ணன். இவருடைய பெயர் சிவசங்கரன். ஆனால், 'பாப்பா' என்றுதான் அழைப்பார்கள். ஆகவே அவர் டி.ஆர்.பாப்பா என்றே அழைக்கப்பட்டார்.
மலையாளப் படமான 'ஆத்ம காந்தி' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். 2004ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி 82வது வயதில் காலமானார். நேற்று அவரது 20வது நினைவு நாள்.