ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
நிக் ஸ்டூடியோ சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கும் பான் இந்தியா படம் 'நாகபந்தம் : சீக்ரெட் ட்ரெஷர்'. விராட் கர்ணா இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ்.அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவாளராகவும், அபே இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். 2025ம் ஆண்டில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
படத்தை இணை தயாரிப்பு செய்வதுடன் இயக்கவும் செய்கிறார் அபிஷேக் நாமா. படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. சிரஞ்சீவி கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். படம் பற்றி அபிஷேக் நாமா கூறும்போது ‛‛திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் புதையல் திறக்கப்பட்டதை அடுத்து, பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ரத்ன பண்டாரத்தை அடுத்து, மறைந்துள்ள பொக்கிஷங்கள் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்கள் நாகபந்தம் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் கதை இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்களுடன் தொடர்புடைய நாகபந்தத்தைச் சுற்றி வருகிறது. அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். உலகத்தரத்திலான மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மந்திரம், மர்மம் மற்றும் சாகசங்கள் அடங்கிய புதிய சாம்ராஜ்யத்திற்கு, ஒரு ஆழமான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்'' என்றார்.