கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் |
நடிகர் ரஜினிகாந்த்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டன்ட் மூலம் சரி செய்யப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவர் விரைவில் 'கூலி' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் மட்டும் வெளியானது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவரது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர் எப்போது மீண்டும் படப்பிடிப்புக்குப் போவார் என்றும் எதிர்பார்த்து வந்தனர்.
இதனிடையே, அவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'வேட்டையன்' படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள அவரை படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த புகைப்படங்கள் நேற்று வெளியாகின. ரஜினிகாந்த் அதே பழைய உற்சாகத்துடன் இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 'கூலி' படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்வார் என்று வெளியான செய்தி தற்போது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.