அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் தனுசும், ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். பின்னர் இவர்கள் சட்டபூர்வமான விவாகரத்து கோரி பரஸ்பரம் ஒப்புதலோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது முதன்மை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையும் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இவர்கள் இருவரும் 7ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அப்படி ஆஜராகி விவாகரத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக வாக்குமூலம் அளித்தால் கோர்ட் முறைப்படி விவாகரத்து வழங்கி விடும்.
ஆனால் நேற்று இருவருமே கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும், இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க உறவினர்களும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டு இருவரும் ஆஜராகவில்லையா என்று தெரியவில்லை. என்றாலும் வருகிற 19ம் தேதி உண்மை நிலவரம் தெரியவரும்.