'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இதில் முதல் நாளே சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. அதில் முத்துக்குமரன், ஜாக்குலின், ரவீந்தர் சந்திரசேகர், ரஞ்சித், சவுந்தர்யா அருண் பிரசாத் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் யாருக்கு குறைவான வாக்குகளை மக்கள் அளித்திருந்தார்களோ அந்த நபர் இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி முன்னிலையில் எலிமினேட் செய்யப்படுவார்.
மேலும் நேற்று இந்த நிகழ்ச்சியின் கேப்டனை தேர்வு செய்வதற்கான போட்டி நடந்தது. அப்போது ஒருபுறம் ஆண்களும் இன்னொரு பெண்களும் உட்கார வைக்கப்பட்டு, அதில் யார் முதலிடத்தில் வருகிறார்களோ அவர்கள் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் ரவீந்தர் சந்திரசேகர் முதல் நபராக வெளியேறி விட்டார். மற்றவர்கள் எல்லாம் வேகமாக ஓடி சென்று இருக்கையை பிடித்துக் கொள்ள, இவரால் தனது வெயிட்டான உடம்பால் ஓட முடியவில்லை. ஆனால் இப்படி ஓடி வந்தது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு வலி நிவாரணி அளிக்கப்பட்டு மாத்திரை கொடுத்துள்ளார்கள்.
இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அவரை கைதாங்கலாக அழைத்து சென்று படுக்கையில் அமர வைத்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு கால் வலி இருந்து வருவதால் அடுத்தபடியாக அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.