2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

ஒரே படத்தில் பல இசை அமைப்பாளர்கள் பணியாற்றுவது அபூர்வமாக நடக்கிற ஒரு விஷயம். அப்படி ஒரு படம் 'கண்ணில் தெரியும் கதைகள்'. 1980ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சரத்பாபு, ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி எம்.என்.ராஜம், விஜயகுமார், விஜயசந்திரிகா உள்பட பலர் நடித்திருந்தனர். தேவராஜ் மற்றும் மோகன் இயக்கி இருந்தனர். நடிகர் ஏ.எல்.ராகவன் தயாரித்திருந்தார்.
கொடூரமான ஒரு பண்ணையாருக்கும் ஒரு ஏழை சிறுவனுக்குமான மோதல்தான் கதை. பண்ணையாரால் துரத்தப்படும் சிறுவன் நகரத்திற்கு வந்து படித்து ஆளாகி மீண்டும் கிராமத்திற்கு சென்று பண்ணையாரை பழிவாங்கும் கதை.
இந்த படத்திற்கு இளையராஜா, சங்கர் கணேஷ், ஜி.கே.வெங்கடேஷ், கே.வி.மகாதேவன், அகத்தியர் என 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தனர். நடிகர் ஏ.எல்.ராகவன் அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர், அவர் தயாரிக்கும் படம் என்பதாலும், தேவராஜ் - மோகன் அனைவருக்கும் பிடித்த இயக்குனர்கள் என்பதாலும் 5 இசை அமைப்பாளர்களும் ஆளுக்கொரு பாடலுக்கு இசை அமைத்து கொடுத்தனர்.
எல்லா பாடல்களுமே ஹிட்டானது. குறிப்பாக இளையராஜா இசையமைத்த “நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இளமை இது புதுமை...” என்ற பாடல் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது.