காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
ஒரே படத்தில் பல இசை அமைப்பாளர்கள் பணியாற்றுவது அபூர்வமாக நடக்கிற ஒரு விஷயம். அப்படி ஒரு படம் 'கண்ணில் தெரியும் கதைகள்'. 1980ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சரத்பாபு, ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி எம்.என்.ராஜம், விஜயகுமார், விஜயசந்திரிகா உள்பட பலர் நடித்திருந்தனர். தேவராஜ் மற்றும் மோகன் இயக்கி இருந்தனர். நடிகர் ஏ.எல்.ராகவன் தயாரித்திருந்தார்.
கொடூரமான ஒரு பண்ணையாருக்கும் ஒரு ஏழை சிறுவனுக்குமான மோதல்தான் கதை. பண்ணையாரால் துரத்தப்படும் சிறுவன் நகரத்திற்கு வந்து படித்து ஆளாகி மீண்டும் கிராமத்திற்கு சென்று பண்ணையாரை பழிவாங்கும் கதை.
இந்த படத்திற்கு இளையராஜா, சங்கர் கணேஷ், ஜி.கே.வெங்கடேஷ், கே.வி.மகாதேவன், அகத்தியர் என 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தனர். நடிகர் ஏ.எல்.ராகவன் அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர், அவர் தயாரிக்கும் படம் என்பதாலும், தேவராஜ் - மோகன் அனைவருக்கும் பிடித்த இயக்குனர்கள் என்பதாலும் 5 இசை அமைப்பாளர்களும் ஆளுக்கொரு பாடலுக்கு இசை அமைத்து கொடுத்தனர்.
எல்லா பாடல்களுமே ஹிட்டானது. குறிப்பாக இளையராஜா இசையமைத்த “நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இளமை இது புதுமை...” என்ற பாடல் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது.