இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
ராம்கோபால் வர்மா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜூனா, அமலா மற்றும் பலர் நடிப்பில் 1989ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'சிவா'. அந்தக் காலத்தில் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு படம். காதல், ரவுடியிசம் என ஒரு புதிய பாணியிலான படத்தைக் கொடுத்தார் இயக்குனர் வர்மா.
அப்போதைய ஒன்று பட்ட ஆந்திராவில் 22 சென்டர்களில் 100 நாட்களும், 5 சென்டர்களில் 175 நாட்களும் ஓடியது. சில தியேட்டர்களில் ஒரு வருடம் ஓடியது.
தமிழில் 'உதயம்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு 1990 பொங்கலுக்கு வெளியானது. அப்போது வெளியான ரஜினியின் 'பணக்காரன்', விஜயகாந்தின் 'புலன் விசாரணை' ஆகிய படங்களுடன் இப்படமும் போட்டி போட்டு ஓடி 175 நாட்கள் வரை ஓடி சாதனை புரிந்தது.
தெலுங்கில் வெளியாகி 35 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து படத்தின் நாயகன் நாகார்ஜுனா, “சாதனைப் படமான 'சிவா' வெளியாகி 35 வருடங்களாகிவிட்டது. அன்றைய தினம் எனது அப்பாவுடன் காரை ஓட்டிக் கொண்டு சென்றிருந்தேன். அப்போது அவர், “நேற்றிரவு சிவா படம் பார்த்தேன், இன்று காலை படம் பெரிய ஹிட் எனக் கேள்விப்பட்டேன். ஆனால், இப்படம் தெலுங்குத் திரையுலகத்தின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறும் என நான் நம்புகிறேன்,” என்றார்.
அப்பா, உங்கள் வார்த்தைகள் எவ்வளவு நம்ப முடியாத உண்மை. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சிவா மீதான அன்புக்கு நன்றி. குறிப்பாக இதை சாத்தியப்படுத்திய அனைத்து மக்களுக்கும் நன்றி, குறிப்பாக இயக்குனர் ராம்கோபால் வர்மா,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ராம்கோபால் வர்மா, “எனது வாழ்நாளில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி. உங்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் என் மீது முழுமையான நம்பிக்கை இல்லாமல், 'சிவா' இல்லை, நானும் இருந்திருக்க முடியாது,” என பதிலளித்துள்ளார்.