Advertisement

சிறப்புச்செய்திகள்

'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரலாற்றுப் படம் இயக்க தயாராகும் இயக்குனர் பிரேம்குமார்

07 அக், 2024 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Director-Premkumar-is-preparing-to-direct-a-historical-film


விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த '96' படத்தை இயக்கியதன் மூலம் தனது முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்தவர் இயக்குனர் பிரேம்குமார். அந்த படத்தில் பிரிந்து போன காதலின் வலியை கூறி இளைஞர்களை தன் வசப்படுத்தியவர், சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி, அரவிந்த் சாமியை வைத்து மெய்யழகன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் இடையே ஆறு வருடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட இவர் அடுத்த படத்திற்கு எத்தனை வருடம் இடைவெளி விடுவார்? என்ன மாதிரி ஜானரில் இவரது கதை இருக்கும்? என்கிற ரசிகர்களின் சந்தேகத்திற்கு தற்போது நடிகர் கார்த்தி பதில் அளித்துள்ளார். ஆம் அடுத்ததாக வரலாற்று படத்தை இயக்குவதற்கு பிரேம்குமார் தயாராகி வருகிறாராம்.

சமீபத்தில் நடைபெற்ற மெய்யழகன் பட வெற்றி சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசும்போது இந்த தகவலை வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது, “மெய்யழகன் படம் வெளியான பிறகு பலரிடமும் உரையாடல்களையும் விவாதத்தையும் இந்த படம் துவங்கி வைத்துள்ளது. அந்த அளவிற்கு உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் பிரேம்குமார். அடுத்ததாக ஒரு வரலாற்று கதை வைத்திருக்கிறார். அதன் எழுத்து நடையை படித்து முடித்ததும் உரிமையுடன் யார்யா நீ என்று கேட்கிற அளவிற்கு மரியாதை போய் அவரிடம் உரிமை வந்து விட்டது. அதை எப்போது எழுதி முடிப்பார் என நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

அடுத்ததாக பிரேம்குமார் இந்த கதையைத்தான் இயக்கப் போகிறாரா இல்லை வழக்கம் போல சமூகப் பின்னணி கொண்ட இன்னொரு படத்தை இயக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
1400 கி.மீட்டரை 12 மணி நேரத்தில் கடந்த 'எம்புரான்' படக்குழு ; பிரித்விராஜ் பாராட்டு1400 கி.மீட்டரை 12 மணி நேரத்தில் கடந்த ... 100 மில்லியனைக் கடந்த 'வாட்டர் பாக்கெட்' பாடல் 100 மில்லியனைக் கடந்த 'வாட்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in