75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருடன் நடித்தவர் அண்ணன் சக்கரபாணி. தம்பியின் உயர்வு ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர். எம்.ஜி.ஆரும் தன் தாய்க்கு பிறகு அண்ணனைத்தான் தெய்வமாக வணங்கினார். பின்னாளில் எம்.ஜி.ஆர் பெரிய நட்சத்திரமாக மாறியபோதும் எல்லா வரவு செலவுகளையும் பார்த்துக் கொண்டவர் சக்கரபாணி. இதனால் சினிமாவில் சக்கரபாணியை 'பெரியவர்' என்றும் எம்ஜிஆரை 'சின்னவர்' என்றும் அழைப்பார்கள்.
இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆரம்ப கால கட்டத்தில் இருவரும் சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் முழுமையான கேரக்டராக இணைந்து நடித்தது 'இரு சகோதரர்கள்' படத்தில்தான். இந்த படத்தில் எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையாவின் நண்பராக நடித்தார். சக்கரபாணி போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
1936ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார், கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், டி.எஸ்.பாலையா, எஸ்.என்.விஜயலட்சுமி, ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கூட்டுக் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு இடையில் வரும் மோதலும், கூடலும்தான் கதை.