ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! |

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருடன் நடித்தவர் அண்ணன் சக்கரபாணி. தம்பியின் உயர்வு ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர். எம்.ஜி.ஆரும் தன் தாய்க்கு பிறகு அண்ணனைத்தான் தெய்வமாக வணங்கினார். பின்னாளில் எம்.ஜி.ஆர் பெரிய நட்சத்திரமாக மாறியபோதும் எல்லா வரவு செலவுகளையும் பார்த்துக் கொண்டவர் சக்கரபாணி. இதனால் சினிமாவில் சக்கரபாணியை 'பெரியவர்' என்றும் எம்ஜிஆரை 'சின்னவர்' என்றும் அழைப்பார்கள்.
இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆரம்ப கால கட்டத்தில் இருவரும் சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் முழுமையான கேரக்டராக இணைந்து நடித்தது 'இரு சகோதரர்கள்' படத்தில்தான். இந்த படத்தில் எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையாவின் நண்பராக நடித்தார். சக்கரபாணி போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
1936ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார், கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், டி.எஸ்.பாலையா, எஸ்.என்.விஜயலட்சுமி, ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கூட்டுக் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு இடையில் வரும் மோதலும், கூடலும்தான் கதை.