300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, ஹிந்தியிலும் நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மும்பை சென்று செட்டிலானார் என்று சொல்லப்பட்டது. அங்கு இருந்தால்தான் வாய்ப்புகளைப் பெற முடியும் என மனைவி ஜோதிகாவின் ஆலோசனையைக் கேட்டுத்தான் சென்னையை விட்டு மும்பைக்குப் போனார் என்பது கோலிவுட் தகவல்.
அவர் அங்கு செட்டிலான பின்பு பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் 'கர்ணா' படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாக தகவலாகவே இருக்கும் அப்படத்தின் அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அப்படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஓம்பிரகாஷ்.
'கர்ணா' படத்தில் சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தற்போது படத்தின் முன்தயாரிப்புப் பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் பணிகளை அவர் முடித்த பின் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.