மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ள 'தேவரா' தெலுங்குப் படம் நேற்று முன்தினம் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. அப்படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அது தெலுங்கு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'கல்கி 2898 எடி' படமே முதல் நாளில் 191 கோடி மட்டுமே வசூலித்த நிலையில் 'தேவரா' படம் 172 கோடி எப்படி வசூல் செய்திருக்க முடியும் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.
இதனிடையே, படத்தின் இரண்டாவது நாளுடன் சேர்த்த வசூல் 243 கோடி என்று அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலான 172 கோடியுடன் ஒப்பிடும் போது இரண்டாவது நாளில் 71 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அவ்வளவு பாதியாக வசூல் குறைந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இன்றைய வசூலையும் சேர்த்து நாளை 300 கோடி வசூல் என அறிவிப்புகள் வரலாம். அதன்பின் வார நாட்களில் படம் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறது என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.