த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ள 'தேவரா' தெலுங்குப் படம் நேற்று முன்தினம் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. அப்படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அது தெலுங்கு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'கல்கி 2898 எடி' படமே முதல் நாளில் 191 கோடி மட்டுமே வசூலித்த நிலையில் 'தேவரா' படம் 172 கோடி எப்படி வசூல் செய்திருக்க முடியும் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.
இதனிடையே, படத்தின் இரண்டாவது நாளுடன் சேர்த்த வசூல் 243 கோடி என்று அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலான 172 கோடியுடன் ஒப்பிடும் போது இரண்டாவது நாளில் 71 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அவ்வளவு பாதியாக வசூல் குறைந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இன்றைய வசூலையும் சேர்த்து நாளை 300 கோடி வசூல் என அறிவிப்புகள் வரலாம். அதன்பின் வார நாட்களில் படம் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறது என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.