மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதில் பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு அந்தமான், கேரளா, மூணார், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இதுவரை சூர்யா இந்த படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வந்தார். இப்போது இந்த படத்திற்காக க்ளின் ஷேவ் செய்து இன்னொரு தோற்றத்தில் நடித்து வருகிறார். ஆனால், இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கின்றாரா அல்லது இரண்டு தோற்றத்தில் நடிக்கின்றாரா என்பது குறித்து சரியான தகவல்கள் தெரியவில்லை.