நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தமிழ் சினிமா பல ஆச்சர்யமான மனிதர்களை கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் பாடகர் மற்றும் நடிகர் வி.என்.சுந்தரம். இவரை அறிமுகப்படுத்த சில குறிப்புகள் 'வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் “வெற்றி வடிவேலனே சக்தி உமைபாலனே” என்று சிவாஜி கணேசன் பாட்டுக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வி.என்.சுந்தரம்.
”மணமகள்” என்ற படத்தில் 'சின்னஞ்சிறு கிளியே' என்ற பாடலைப் பாடி முதன் முறையாக பாரதியாரின் பாடலை திரைக்கு கொண்டு வந்தவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய கர்நாடக இசை பாடல்களை திரையிசை பாடல்களாக மாற்றி பாடியவரும் இவர்தான்.
பாடகராக இருந்தபோதும், நாடகத்தில் நடிகராக இருந்த இவர் சினிமாவிலும் நடிக்கவே வந்தார். அதாவது பாடிக்கொண்டே நடிப்பதற்கு. வி.என்.சுந்தரம். தஞ்சை மாவட்டத்தில் விசலூரில் பிறந்தவர். இரண்டரை வயதில் தாயை இழந்தவர். அத்தையின் வீட்டில் வளர்ந்தார். பளிச்சென்ற குரலும், உயரமான சிவந்த மேனியும் வி.என்.சுந்தரத்திற்கு நாடகங்களில் ராஜபார்ட் வேடங்களைப் பெற்றுக் கொடுத்தன.
பின்னர் சினிமாவுக்கு வந்த இவர் 1935ம் ஆண்டு வெளிவந்த 'மார்கண்டேயன்' படத்தில் நாயகனாக அறிமுகமானார். பின்னர் சந்திரஹாசா, சுந்தரமூர்த்தி நாயனார், கண்ணப்ப நாயனார், சங்கராச்சாரியார், சுபத்ரா அர்ஜுனா, மணி மாலை, ராஜசூயம், தன அமராவதி படங்களில் நடித்தார்.
புராண பட காலம் முடிந்து சமூக படங்கள் வரத் தொடங்கியதும் அவற்றில் நடிக்க பிடிக்காமல் நடிப்பை கைவிட்டு விட்டு பின்னணி பாடல்கள் மட்டுமே பாடினார். 1964ம் ஆண்டு வரை பாடிக் கொண்டிருந்தார். பாடல்களில் மேற்கத்திய பாணி புகுந்தபோது அது பிடிக்காமல் பாடுவதையும் நிறுத்திக் கொண்டார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு 'கலைச் செம்மல்' விருது கொடுத்தது. ஆனால் தமிழக அரசு கொடுக்க முன்வந்த 'கலைமாமணி' விருதை ஏற்க மறுத்து விட்டார். 2009ம் ஆண்டு தனது 92வது வயதில் காலமானார்.