ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். முன்னணி ஹீரோக்கள் பலரும் அவரை விரும்பி அழைத்து தங்களது படங்களுக்கு நடனம் அமைக்கச் செய்வார்கள்.
'ஜெயிலர்' படத்தில் 'காவாலய்யா', 'வாரிசு' படத்தில் 'ரஞ்சிதமே', 'திருச்சிற்றம்பலம்' படத்தில் 'மேகம் கருக்காதா', 'பீஸ்ட்' படத்தில் 'அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா', 'டாக்டர்' படத்தில் 'செல்லம்மா', 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் 'காந்தக் கண்ணழகி', 'மாரி 2' படத்தில் 'ரவுடி பேபி', 'குலேபகாவலி' படத்தில் 'குலேபா' ஆகிய பாடல்களுக்கு நடனம் அமைத்து இங்கும் புகழ் பெற்றவர்.
21 வயதான நடனப் பெண் ஒருவரை 'பாலியல்' ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது சைபராபாத், ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்த போதும் நர்சிங்கி என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிலும் தன்னை பல முறை தாக்கியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். தற்போது அந்தப் புகார் அடுத்த கட்ட விசாரணைக்காக நர்சிங்கி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜானி மாஸ்டர் மீது, 376 (கற்பழிப்பு), 506 (குற்றவியல் மிரட்டல்), 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநில பெண்கள் பாதுகாப்புப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் ஷிகா கோயல் இது குறித்து விசாரிக்கும்படி திரைப்பட அமைப்பினருக்கும் ஆலோசனை சொல்லியுள்ளாராம். மேலும், பாலியல் துன்புறுத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் தெரிவித்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.