எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பிறகு ‛நீ நான் காதல்' தொடரில், அனு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சாய் காயத்ரி. இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் திடீரென சீரியலை விட்டு விலகிவிட்டார். சாய் காயத்ரிக்கு பதிலாக தற்போது அனு கதாபாத்திரத்தில் அர்ஷிதா நடித்து வருகிறார். இந்நிலையில், சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை சாய் காயத்ரி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அதில், 'எதிர்பாராத உடல்நலக்குறைவு காரணமாக நீ நான் காதல் தொடரிலிருந்து விலகுகிறேன். கடவுளின் அருளாலும் உங்களது அன்பு மற்றும் பேராதரவாலும் விரைவிலேயே மீண்டும் திரையில் வருவேன்' என்று கூறி கடந்த ஒருவருட காலமாக தன்னுடன் பயணித்த நீ நான் காதல் மொத்த குழுவினருக்கும் நன்றி கூறியுள்ளார்.