மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பழம்பெரும் நடிகையான லதா(71). மறைந்த நடிகர் எம்ஜிஆர் உடன் பல படங்களில் நடித்துள்ளார். அவரின் ஆஸ்தான நடிகைகளில் இவரும் ஒருவர். 100 படங்களில் நடித்துள்ள இவர் தற்போதும் சினிமாவில் தனக்கு பிடித்த வேடங்களில் மட்டும் அவ்வப்போது நடிக்கிறார். சில சீரியல்களிலும் நடிக்கிறார். நடிகர் சங்கத்திலும் பொறுப்பில் உள்ளார்.
எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகிய பின்னர் மற்ற நடிகர்களான முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்டோருடனும் நடித்தார் லதா. பல ஹீரோக்களுடன் இவர் நடித்திருந்தாலும் நடிகர் ரஜினி உடன் மட்டும் இவரை வைத்து நிறைய கிசு கிசுகள் அப்போது வந்தன. இதுபற்றிய கேள்விக்கு இப்போது ஒரு பேட்டியில் நடிகை லதாவே பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : ‛‛ரஜினியை பொருத்தமட்டில் மிகவும் நல்லவர். எனக்கு நல்ல நண்பர் அவ்வளவு தான். அந்த சமயம் தான் அவர் வளர்ந்து வரும் நடிகர். நான் அப்பவே எம்ஜிஆர் படத்தின் ஹீரோயின். ஆழியாறு அணை அருகே ‛ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நானும், மஞ்சுளாவும் நல்ல தோழிகள். மாலை நேரத்தில் எங்களுடன் வந்து ரஜினி அமர்ந்து கொள்வார். நல்லா பேசுவோம், சாப்பிடுவோம், கோயிலுக்கு எல்லாம் போவாம், அவ்வளவு தான். மற்றபடி எதுவும் கிடையாது.
இப்ப வர கிசு கிசு எல்லாம் ஒன்னுமில்லை. அப்போது எல்லாம் நிறைய கதை சொல்வார்கள். ஆனால் அது எதுமே உண்மையில்லை. ரஜினி ஒரு நல்ல மனிதர். இப்போது வரை நான் மதிக்கின்றன ஒரு நடிகர் என்பதை விட மனிதர். உலகளவில் அவர் புகழ்பெற்ற நடிகர் என்றாலும் கூட இன்றைக்கும் மிகவும் எளிமையான, அடக்கமான மனிதராக உள்ளார். அதனாலேயே இப்போது வரை அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார்.