ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகர் பிரசாந்த் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அதன்பிறகு அவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் சினிமாவில் அவரால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. சமீபத்தில் பிரசாந்த் நடித்து, வெளிவந்த ‛அந்தகன்' திரைப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரசாந்த் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.