'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
நடிகர் பிரசாந்த் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அதன்பிறகு அவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் சினிமாவில் அவரால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. சமீபத்தில் பிரசாந்த் நடித்து, வெளிவந்த ‛அந்தகன்' திரைப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரசாந்த் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.