பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 2009ல் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இப்போது பிரிந்து விட்டனர். இதுதொடர்பாக நேற்று(செப்., 9) ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில், ‛‛நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பின் ஆர்த்தியை பிரியலாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சாந்தவர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டது. இது எனது சொந்த முடிவு என்பதால் எனது தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். அனைவரின் ஆதரவுக்கு நன்றி'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று(செப்., 10) விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2009ல் ஆர்த்தியை திருமணம் செய்ததை ரத்து செய்யக் கோரியும், விவாகரத்து கோரியும் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கானது அக்., 10ல் விசாரணைக்கு வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி இன்று(செப்., 10) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளில் இப்படியொரு கடினமான முடிவை எடுத்த ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை விட தைரியமாக இருங்கள் என ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.