வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு | நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் |
கங்குவா படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீஸ் எதிர்பார்த்துள்ளார் சூர்யா. அடுத்தப்படியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 44 வது படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கப்பட்ட நிலையில், அதையடுத்து ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். தற்போது ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராமும் சூர்யா 44 வது படத்தில் இணைந்திருக்கிறார். அந்த வகையில் அப்பாவும், மகனும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். மேலும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.