ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கான நிவாரணத்திற்கு உதவி செய்வதற்காக தெலுஙகுத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் கோடிகளில் அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.
நடிகர் பிரபாஸ் 2 கோடி, சிரஞ்சீவி 1 கோடி, பாலகிருஷ்ணா 1 கோடி, மகேஷ் பாபு 1 கோடி, ஜுனியர் என்டிஆர் 1 கோடி, அல்லு அர்ஜுன் 1 கோடி என இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து கொடுத்துள்ளனர். ஆந்திர மாநில உதவிகளுக்கு அதன் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் 1 கோடி கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவன் கல்யாண் ஏன் நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு, “நான் நேரில் செல்ல வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால், அதிகாரிகள் நான் நேரில் வந்தால் அங்கு கூட்டம் கூடினால் நிவாரணப் பணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றனர். அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதால்தான் நேரில் செல்லவில்லை” என விளக்கமளித்துள்ளார். அதே சமயம் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் விவாதித்து நடவக்கை எடுத்து வருகிறார்.