ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கான நிவாரணத்திற்கு உதவி செய்வதற்காக தெலுஙகுத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் கோடிகளில் அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.
நடிகர் பிரபாஸ் 2 கோடி, சிரஞ்சீவி 1 கோடி, பாலகிருஷ்ணா 1 கோடி, மகேஷ் பாபு 1 கோடி, ஜுனியர் என்டிஆர் 1 கோடி, அல்லு அர்ஜுன் 1 கோடி என இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து கொடுத்துள்ளனர். ஆந்திர மாநில உதவிகளுக்கு அதன் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் 1 கோடி கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவன் கல்யாண் ஏன் நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு, “நான் நேரில் செல்ல வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால், அதிகாரிகள் நான் நேரில் வந்தால் அங்கு கூட்டம் கூடினால் நிவாரணப் பணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றனர். அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதால்தான் நேரில் செல்லவில்லை” என விளக்கமளித்துள்ளார். அதே சமயம் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் விவாதித்து நடவக்கை எடுத்து வருகிறார்.