ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
உதிரிபூக்கள், முள்ளும் மலரும் போன்ற உயர்ந்த படைப்புகளை தந்த மகேந்திரன் அடிப்படையில் எழுத்தாளர். நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை, கங்கா, திருடி, தங்கபதக்கம் உள்ளிட்ட பல படங்களின் கதை இவருடையது. அந்த வரிசையில் மகேந்திரன் எழுதிய நாடகம்தான் 'ரிஷி மூலம்'. சென்னை மேடையில் நடத்தப்பட்டு வந்த இந்த நாடகத்தை எஸ்.பி.முத்துராமன் அதே பெயரில் படமாக இயக்கினார்.
பல வருடங்கள் பிரிந்து வாழும் கணவன், மனைவியை அவர்களது பிள்ளைகள் சேர்த்து வைப்பது மாதிரியான கதை. இதில் கணவனாக சிவாஜியும், மனைவியாக கே.ஆர்.விஜயாவும் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். 1980ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் 100 நாளை கடந்து ஓடியது. 100வது நாளில் படத்தின் தயாரிப்பாளர் சிவாஜிக்கு வைர மோதிரம் பரிசளித்தார்.
15 வருடங்களுக்கு பிறகு கணவனும், மனைவியும் சந்தித்து கொள்ளும் வசனமே இல்லாத 5 நிமிட காட்சி இன்றளவுக்கும் பேசப்படுகிறது. வெறும் முக பாவத்திலேயே அன்பு, காதல், பிரிவு, சோகம், மகிழ்வு எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருப்பார்கள் சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும்.