இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சில பல பஞ்சாயத்துகள், வழக்குகள் ஆகியவற்றால் தட்டுத் தடுமாறி எழும்பி வருகிறது. கட்டிட வேலைகள் ஆரம்பமாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதை விரைந்து முடிக்க தற்போதைய நிர்வாகக் குழுவினர் முயன்று வருகிறார்கள்.
ஏற்கெனவே நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், நெப்போலியன், தனுஷ், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தலா 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கினார்கள். அதையடுத்து நின்று போன கட்டிட வேலைகள் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் ஆரம்பமானது.
இருந்தாலும் இன்னும் சில கோடிகள் இருந்தால் தான் கட்டிட வேலைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளதாம். எனவே, வெளிநாடுகளில் நடிகர் சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தி தேவையான நிதியைப் பெற ஆலோசித்து வருகிறார்கள்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் இது குறித்து சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அடுத்து நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆலோசித்துள்ளார்கள். விரைவில் கலை விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.